வியாழன், 18 டிசம்பர், 2008

என் காதல்!

நாட்கள் ஒடின‌
என் காதலும் வளர்ந்தது!
கருவுற்ற பெண்ணின்
வயிற்றைப் போல‌
என்றாவது ஒரு நாள்
வெளியில் தெரியப் போவுது
என் காதல்!

சொந்தங்கள் மறுத்து காதல்
கை கூடவில்லை என்றால்
செத்துவிடுவேன் என்றாய்!.
தினம் தினம் நீ
என்னைப் பிரியும் போது
நான் சாவதை மறந்து!

புதன், 10 டிசம்பர், 2008

இரத்தத்தை உறிஞ்சும் கடன் அட்டை

இரத்தத்தை உறிஞ்சும் கடன் அட்டை

இது எனக்கு நேர்ந்த சம்பவம் அல்ல கொடுமை.ஆம் இன்றைய உலகில் நகர வாழ்வில் ஒரு அங்கமாக இருப்பது இந்த கடன்அட்டை. கவனமாக கையான்டால் இந்த கடன் அட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றல்லாம் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்.என்னதான் கவனமாக கையாண்டாலும் ஒரு சில நேரங்களில் இந்த கடன் அட்டை நம்மை பதம் பார்த்துவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இனி என் வாழ்வில் நடந்த கொடுமைக்கு வருவோம். கிரடிட் லிமிட் எனப்படுகின்ற அதிகபட்ச கடன் தொகை ரூ.25000 ஆயிரங்கள் இருந்த போதும், நான் மாதா மாதம் செலவ‌ழிக்கும் தொகையோ 5000 க்குள்தான்.குறிப்பிட்ட அந்த மாதம் மட்டும் ஒரு 14000
செலவழித்து விட்டேன். இது நடந்த ஒரு வாரத்தில் எனக்கு ஒரு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) வந்ததது அதில் "நீங்கள் உங்களுடைய அதிகபட்ச செலவழிக்கும் தொகையை கடந்து விட்டீர்கள், எனவே உடனடியாக அந்த தொகையை மற்றும் 1000 அபராதம் ஆகியவற்றை செலுத்தினால்தான் நீங்கள் உங்களுடைய அட்டையை பயன்படுத்த இயலும்" என இருந்தது.
உடணே பதறி போன நான் "கஸ்டமர் கேர்" எனப்படும் வாடிக்கையாளர் உதவியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது.

உங்களுடைய அதிகபட்ச கடன் தொகை(கிரடிட் லிமிட்) ரூ.12000 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்கள்.உடனே நான்ஆகா மாடினார்கள் என நினைத்து.என்னுடை கிரடிட் லிமிட் குறைக்கும் பொது எனக்கு தெரியப்படுத்த வேண்டும் அல்லவா? என்றேன்
கடுப்பாக.ஆனால் அவர்களே நாங்கள் 10 நாட்களுக்கு முன்பே தாபால் மூலமாக அனுப்பி விட்டோம் என்றனர்.

நமக்கு இருக்கும் வேலைப்பளுவில் இந்த பிரச்சினையை எங்கே கவணிப்பது என்று விட்டுவிட்டேன், மேலும் அந்த அட்டையை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.

இதில் யாரை குற்றம் சொல்வது. மாதாம் பில்லைமட்டும் கொரியர் மற்றும் எஸ்.எம்.ஏஸ் என அனுப்பும் இவர்கள் இது போன்ற‌ முக்கியமான செய்திகளை தெரிவிக்காத தெரிவிக்காத இவர்களையா? அல்லது எத்தணையோ வங்கிகள் இருக்க அந்த குறிப்பிட்ட வங்கியில் கடன் அட்டை பெற்ற என்ணையா?

சனி, 29 நவம்பர், 2008

தண்ணீர் சுடும்.

நம் நாட்டில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தண்ணீர் பிரச்ச‌னையாகும்.இது இரு மாநிலங்களுக்கு இடையோ அல்லது இரு ஊர்களுக்கு இடையோ இருப்பதை நான் கண்கூடாக பார்க்கிறோம்.இதற்கு காரணமாக இருப்பது தண்ணீரை முறையாக பயன்படுத்தாதும், மேலும் மழை பொழிவதற்கு காரணமாக இருக்கும் மரங்களை வளர்க்காமல் வெட்டுவதுமே ஆகும். இதில் முதல் காரணமான தண்ணீரை முறையாக பயன்படுத்தாமையே, இதை தடுக்க நாம் தினந்தோறும் தண்ணீரை பயன்படுத்தும் போது சிறிது கவணமாக இருந்தாலே போதுமானது.

ஆனால் நானே பலபேர் தண்ணீரை விரயம் செய்வதை பார்த்திருக்கிறேன், சிலரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என சொல்லியும் இருக்கிறேன். எனது அலுவலகத்தில் தினந்தோறும் நடைபெறும் சம்பவம் இது.சிற்றுண்டியில் கைகழுவி முடித்தவுடன் அப்படியே மூடாமல் திறந்து விட்டுவிட்டு செல்வார்கள் சிலர். இதுபோல சிறு சிறு செயல்களில் கவணமுடன் இருந்தால் எதிர்காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை ஒரளவாவது தடுக்கலாம்.  


அடுத்த பிரச்சனையான மரங்களை வெட்டுவதை தடுப்பது இயலாத காரணம்.ஆமாம் வளரும் நாடுகளின் கட்டுமானப் பணிகள் மற்றும் நகரமயமாதல் ஆகியவகைகளுக்கு மரம் இன்றியமையாத பொருளாகும்.
எனவே மரம் வெட்டுவதை எதிர்த்து குரல் எழுப்புவதை விட மரம் நடும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்ச்சி செய்தாலே போதுமானது.அதாவது ஒரும் மரம் வெட்டினால் இரு மரக்கண்றுகள் நடும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது. இதை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கடைபிடித்தாலே போதும் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற தட்டுப்பாட்டை தடுத்து விட முடியும்.

இவ்வாறு செய்தால் தண்னீர் சுடுவதை தவிர்க்கலாம், இல்லை என்றால் இந்த தண்ணிர் சுடுவது நிச்சயம்



செவ்வாய், 25 நவம்பர், 2008

உடல் உறுப்புகள் தானம்‍ தமிழகம் முன்னோடி

கடந்த சில நாட்களாக நாம் வழக்கமாக கேள்விப்படுகிற செய்தி, "இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தனர், அவர்களது உறவினர்கள்". இது எவ்வளவு பெரிய உதவி மனித குலத்திற்கு.யாருக்கும் பயனில்லாமல் மண்னுக்குள் மக்கவிருக்கும் மனித உறுப்புகளை அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம், அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்த பெருமையும். மேலும் அவர் மூலம் உங்கள் இறந்த உறவினரையும் நீங்கள் மறக்காமல் இருக்க வழி ஏற்பட ஒரு வாய்ப்பைக்
அமையும்.

பலவருடங்களாக மிக அரிதாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி. இப்போது பரவலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இதற்கு ஊன்றுகோலாக அல்லது முன்னோடியாக இருந்தது , ஒரு மருத்துவருடைய குடும்பம் என்றால் அது மிகையாகாது.

ஒரு விபத்தில் அடிபட்டு மூலை செயல் இழந்துவிட்ட தன் மகன் இனிமேல் பிழைக்க வாய்ப்பு இல்லை என் தெரிந்து கொண்ட அந்த மருத்துவ தம்பதியினர். இதயத்திற்காக தவித்துக்கொண்டிருந்த ஒரு சிறுமிக்கு தானமாக கொடுக்க முன்வர அதனைத்தொடர்ந்து, அந்த இதயத்தை சிறுமிக்கு பொறுத்த காவல் துறை முதல், மருத்துவமணை வரை அணைவரும் உதவி செய்து. சிறுமியை பிழைக்க வைத்தது அணைவரும் அறிந்ததே.

இதன் மூலம் மக்கள் மனதில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்திய அந்த மருத்துவ தம்பதியனரை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

தன் ஒரே மகன் இறந்த துக்கத்திலும், ஒரு சிறுமியின் வாழ்க்கையில் ஓளியேற்ற வேண்டும் என் நினைத்த அந்த பெற்றோர்கள் நிச்சயம் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் செய்த இந்த செயல் மூலம் அந்த சிறுமி மட்டுமல்ல பலபேர் இன்று பயன் பெறுகிறார்கள், மேலும் பலர் தமிழகத்தில் இறந்தவர்களின் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வருகிறார்கள்.

எந்த ஒரு நல்ல செயலுக்கும் சிறந்த தொடக்கம் தேவைப்படும். அந்த தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த மருத்துவ தம்பதியருக்கு என் மணமார்ந்த பாராட்டுக்கள்.

திங்கள், 24 நவம்பர், 2008

இறைவன் போட்ட கோலம்


புள்ளிகள் வைக்காமல் இறைவன்
போட்டகோலம் நீ!
புள்ளிகள் வைத்து இறைவன் போட
மறந்த கோலம் நான்!
----சிறுவன்

விஜய்,அஜித்,மாதவன்

இது கதை அல்ல நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம்.

ஓரு முறை நானும் எனது நண்பர்களும் கல்லூரி முடிந்த்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது எதிரே வந்த மூன்று பெண்கள் கையில் பெரிய தாம்புளம், அதில் ஒரு சாமிப்படம் "என்ன சாமி என்று கவணிக்க வில்லை" மற்றும் விபூதி, குங்குமம் ஆகியவைகளை வைத்துக் கொண்டு. "சார் எங்க அக்கா! கல்யாணம் ஆகிட்டா! பிச்சை எடுத்து அந்த காசை உண்டியல்ல போடுறேன்னு கோயிலுக்கு வேண்டிக்கிட்டாங்க!". அதனால உங்களால் முடிந்ததை இந்த தட்டில் போடுங்க என்று. கொஞ்சம் விபூதியை கொடுத்தனர்.

இது ஏமாற்று வேலை என உணர்ந்து கொண்ட நாங்கள். அதல்லாம் தரமுடியாது என்று கூற அவர்கள் சென்றுவிட்டனர். "எத்தனை முறைதான் நாங்களும் ஏமாறுவது".

சற்று தூரம் சென்ற அவர்கள் "ஏய் விஜய்,அஜித்,மாதவா கையில்ல காசு இல்லனா எங்க கூட வாங்க". என்று கோரசா கத்த.எங்களுக்கோ ஒரே அவமானம். உங்களுக்கு திமிர்தான் என நினைத்துக்கொடண்டு சென்றோம். வேறேன்ன செய்ய முடியும்

வெள்ளி, 21 நவம்பர், 2008

பாத்திரம் அறிந்து பிச்சை போடனும்....

நான்கு கல்லூரி நண்பர்கள் இரவு உணவை முடித்துவிட்டு காலார நடக்க சென்றார்கள்.அப்படியே செல்லும் வழியில் வாழைப்பழம் சாப்பிடலான்டா!... என ஒருவன் சொல்ல அணைவரும் அருகில் இருந்த பெட்டிக்கடையை சென்றடைந்தார்கள். கடையில் கூட்டம் என்பதால் சற்று தள்ளி நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது பிச்சைகாரர் ஒருத்தர் கடையில் தொங்கிக்கொண்டிருந்த வாழைத்தாரில் இருந்து கடைகாரருக்குத் தெரியாமல் வாழைப்பழம் ஒன்றை பிட்டுக்கொண்டு இருந்தார்.அதை அந்த நான்கு நண்பர்களில் ஒருவன் பார்த்து விட்டான். ஆனால் அந்த பிச்சைகாரர் பசிக்ககிறது என கையால் சைகைகாட்ட பேசாமல் விட்டு விட்டான்.

பிச்சைகாரன் வாழைப்பழத்துடன் செல்ல முயலுவதை கவணித்த கடைகாரன். அடிக்க கையை ஓங்க அவன் "அவதான் எடுத்துக்க சொன்னாரு" என்று அந்த நான்கு நண்பர்களில் ஒருவனை சொல்ல ... கடைக்காரன் ஆரம்பித்தான் "ஏன்டா? நீங்க எல்லாம் படிக்கிற பசங்கதான............. " என்று.

அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது தலைப்பு.