வியாழன், 2 ஆகஸ்ட், 2012

Part-II வேங்கையின் மைந்தன்- முதலாம் இராஜேந்திரன்

        இதற்கிடையில் தப்பியோடிய மகிந்தன் மகன் மற்றும் அமைச்சர் மெய்கீர்த்தி ஆகியோர் சோழர்களை பழிவாங்க துடிக்கின்றனர். மன்னன் ராஜேந்திரன் இலங்கை போரிலே பெரும்பான்மையாக கலந்து கொண்ட வீரர்களுக்கு பரிசாக புதிய தலைநகர் ஒன்றை அமைத்து அதற்கு சோழபுரம் என்ற பெயரை வைப்பதற்கான திட்டத்தை வகுக்கிறார். மேலும் அந்த நகரில்  தஞ்சை பெரிய கோவில் போல  மிகப்பெரிய ஒரு ஆலயத்தை நிர்மாணிக்கவும் சொல்கிறார்.
இன்னொருபுறம் மதுரையில் ஒரு கோட்டையை நிர்மாணிக்கவும் உத்தரவிடுகிறார் இதை அறிந்த பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் சினம் கொண்டு இரகசியமாக படை திரட்டி போரிட துணிகிறான். இதற்கு உதவியாக இளங்கோவின் நண்பன் வீரமல்லனின் உதவியை சுந்தர பாண்டியன் அமைச்சர் உதவியுடன் பெறுகிறார். ஏற்கனவே இளங்கோவின் புகழின் மேல் பொறாமை கொண்ட வீரமல்லன், ரோகிணியின் அழகில் மயங்கி எப்படியாவது சோழர்படைகளை வெல்வதற்கு சுந்தர பாண்டியனுக்கு உதவியாக இருந்தால்  தானும் ஒரு சிறிய நாட்டிற்காவது  அரசனாகிவிடலாம் அப்புறம் ரோகினியை மணப்பது எளிது என்று எண்ணி அவர்களின் திட்டத்திற்கு  உதவுவதாக வாக்களிக்கிறான்.
வடக்கே சென்ற சோழர்படைகள் வாதாபியை  வெற்றி கொண்ட செய்தி அறிந்த ராஜேந்திரன், அப்படைகளை மேலும் முன்னோக்கி கங்கை வரை சென்று தீர்த்தம் கொண்டுவர உத்தரவிடுகிறார்.மேலும் வழியில் இருக்கும் நாட்டின் அரசர்கள் பணியாவிட்டால் அவர்களை வென்று முன்னேறும் படி சொல்கிறார்.ஆறுமாதகாலம் கழித்து சோழர்படைகள் கங்கை தீர்த்ததுடன் திரும்பி வருகின்றன இந்த வெற்றியின் நினைவாக தான் புதிதாக நிர்மாணித்திருக்கும் சோழபுரத்திற்கு கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரை சூட்டுகிறார். சோழ நாடே கங்கை கொண்ட சோழபுரத்தில் திரண்டு வெற்றி விழா கொண்டாடுகிற  நேரத்தில் இளங்கோவின் கொடும்பாளூரை முற்றுகையிட்டு தீக்கிரையாகுகின்றன பாண்டியபடைகள், மேலும் அதே நேரத்தில் வெற்றி விழாவிற்குள் மாறுவேடத்தில் புகுந்து குழப்பத்தை விளைவித்து கைபற்றி விடவேண்டும் என்ற நோக்குடன் வருகின்றனர் பாண்டிய படைகள். இதனை ரோகிணியின் மூலன் அறியும் இளங்கோ பாண்டியர் படைகளை துரத்தி அடிப்பதுடன் மகிந்தன் மகன் காசிபனையும் கொலை செய்கிறான். இளங்கோவிடம் உயிர் பிச்சை பெரும் நண்பன் வீரமல்லன் மனம் திருந்தி இறக்கும் தருவாயில் இருக்கும் ரோகினியை காப்பற்றி இளங்கோவிடம் ஒப்படைக்கிறான்.
ராஜேந்திரன் மதுரையில் அமைக்கபட்ட புதிய கோட்டையில் தன் மகனுக்கு சுந்தர பாண்டியன் என்பெயரிட்டு பாண்டிய மணிமுடியை அவனுக்கு அணிவித்து பாண்டிய நாட்டை ஆளும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார். இளங்கோ தன்னை காதலித்த ராஜேந்திரன் மகள் குந்தவை மற்றும் ரோகினியை மணந்து கொள்கிறான்.
இதற்கிடையில் சிங்கள் அமைச்சர் மெய்கீர்த்தின் சதியால் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருக்கும் சோழ வணிகர்கள்  ரோகன படைகளால்(இந்தோனேசியா)  தாக்கபடுகிறார்கள். அவர்களை காக்கவும் ரோகனத்தை கைபற்றவும் இளங்கோ படையுடன் புறப்பட்டு வெற்றி பெற்று திரும்புகிறான்.
முடிந்தது

புதன், 1 ஆகஸ்ட், 2012

வேங்கையின் மைந்தன்- முதலாம் இராஜேந்திரன்

வேங்கையின் மைந்தன் 
       முதலாம் இராஜேந்திரனுக்கு மிகவும் பொருத்தமான பெயர், அதையே தான் எழுதிய வரலாற்று நாவலுக்கு தலைப்பாக இட்டிருப்பது அந்த மன்னனுக்கு மேலும் புகழ் சேர்ப்பது போலாகும். ஆம் நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது 1960 களில் வெளிவந்து இந்திய அரசின் சாகித்ய அகடமி விருது பெற்ற முதாலாம் இராஜேந்திர சோழனின் வரல்லாறை கூறும் நாவல் வேங்கையின் மைந்தன். முதலாம் இராஜேந்திரனுக்கு வயது ஆகிவிட்டதால் அவரை கதையின் நாயகன் ஆக்காமல் கொடுமபாளூர் இளவரசனை(சோழர் படை தளபதி) கதையின் நாயகன் ஆக்கியுள்ளார். திரு.அகிலனின் எண்ணத்தில் உதித்து எழுத்தாக வெளிவந்தது. 

" தாய் 8 அடி  பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்" "புலிக்கு பிறந்தது பூனையாகுமா" போன்ற எத்தனை தமிழ் பழமொழிகள் உள்ளதோ அதை அத்தனையும் உதாரணமாக  முதலாம் இராஜேந்திரனுக்கு சொல்லலாம். ராஜராஜன் ஆட்சிக்கு வந்ததே நாற்பது வயதிற்கு மேல் தான் அதன் பிறகு  அவன் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல இருந்தாதால் அவனை  அடுத்து பதவிக்கு வரவேண்டிய அவன் மகன் முதலாம் இராஜேந்திரனும் ஆட்சி கட்டிலில் ஏற கிட்டதட்ட 5o  வயது ஆகிவிட்டது. ஆனாலும் தந்தையின் வழி நின்று இன்னும் சொல்லபோனால் அவரைவிட ஒருபடி மேலே சென்று ஆட்சியை திறம்பட செய்து பல நாடுகளை கைப்பற்றி புலிக்கொடியை பறக்க விட்டவர். அவரின் திறமைக்கு இன்றும் சான்றாக விளங்குவது கங்கை கொண்ட சோழபுரம். ஒருமுறை அதை நேரில் சென்று பாருங்கள் அதன் பிரமாண்டம் என்னெவென்று உங்களுக்கு புரியும். 
கதை சுருக்கம்:
சோழர்களின் கீழ் அரசாண்ட பாண்டியர்கள் சிங்கள மன்னன் மகிந்தனுடன் சேர்ந்து சோழர்களை போரில் வெல்ல துடிக்கின்றனர். மேலும் வடக்கே சாளுக்கிய மன்னனும் சோழர்கள் மீது படையெடுத்து வருகிறான். பாண்டியர்களை தூடிவிடும் சிங்களர்களுக்கு பாடம் புகட்டினால் பாண்டியர்கள் தானாக அடங்கி விடுவார்கள், மேலும் ராஜராஜன் இறக்கும் தருவாயில் தான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றவும் சிங்களர்கள் மீது படை  எடுத்து சென்று காலங்காலமாக சிங்களவர்களின் பிடியில் இருக்கும்  மணிமுடியையும்  கொண்டுவந்து அதை தன்  மகனுக்கு முடிசூட்டி பாண்டிய நாட்டை அவனிடம் ஒப்புவிக்கவும் முடிவு செய்கிறார் . இதற்கு பொருத்தமானவன் தனது தாய் வழி சொந்தத்தில் வந்த கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ என்று முடிவு  செய்து அவனுக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு வந்தியதேவனை(பொன்னியின் செல்வனில் வரும் அதே வந்தியத்தேவன் தான் ஆனால் கிட்டத்தட்ட ௭௦ வயது முதிர்ந்த கிழவனாக தோற்றமளிக்கிறார்)  அனுப்புகிறார்.

சிங்கள மன்னன் மகிந்தனோ அமைச்சர் மெய்கீர்த்தி பிடியில் இருக்கிறார், மேலும் அவன் வைத்தது  அங்கு சட்டமாக இருக்கிறது. இதற்கிடையில் சோழ படைகள் இலங்கையை வென்று மன்னன் மகிந்தன் அவன் மனைவி மற்றும் அவரது மகள் ரோகினி சிறைபடுத்தப்படுகிரார்கள். மகிந்தனின் மகன் காசிபன்  , அமைச்சர் ஆகியார் தப்பித்து சென்று சோழர்களை பழி வாங்க துடிக்கின்றனர்.இதற்கிடையில் மகிந்தனின் மகள் ரோகினி இளங்கோ மீது காதல் கொள்கிறாள். ரோகிணியின் உதவியுடன் பாண்டிய மணிமுடியை கண்டுபிடித்து மணிமுடி மற்றும் சிறைபடுதப்பட்ட மகிந்தன் குடும்பத்துடன் சோழர் படைகள் நாடு திரும்புகிறன. 
தொடரும்