வியாழன், 28 ஜூன், 2012

சிவகாமியின் சபதம் - புத்தக விமர்சனம்

சிறுவதில் கல்கியில் தொடராக வந்த பொன்னியின் செல்வன் நாவலை எப்போதாவது ஓரிரு பகுதியை படித்ததுண்டு அப்போதெல்லாம் அதன் மீது அந்த அளவிற்கு ஈர்ப்பு இல்லை. பலர் பொன்னியின் செல்வன் நாவலை பற்றி சொல்ல சொல்ல அப்படி என்னதான் இதில் இருக்கிறது பார்ப்போமே, என்று முடிவு செய்து புத்தகத்தை வாங்கலாம் என்று சென்று பார்த்தால் ஐந்து பாகங்கள் ஒவ்வொரு பாகமும் ஒரு புத்தகம். இது வேலைக்கு ஆவாது ... அப்படின்னு நெனைச்சி .... முதல்ல கல்கி எழுதிய பார்த்திபன் கனவு படிப்போம் பிடிசிருந்ததுன்னா பொன்னியின் செல்வன் படிக்கலாம் அப்படின்னு, பார்த்திபன் கனவு படித்தேன். விளைவு புத்தகம் ரொம்ப பிடிச்சி போயி உடனே பொன்னியின் செல்வன்  வாங்கி படித்து முடித்தேன். இதனால் ஏற்பட்ட ஆர்வம் காரணாமாக சிவகாமியின் சபதம் படித்து முடித்தேன். பார்த்திபன் கனவு நாவலிலே சிவகாமியின் சபதத்தை படித்த பிறகு இந்த நாவலை படித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கும்.இந்த நூலுக்கு விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை அதனால் எனக்கு தெரிந்த கதை சுக்கத்தை மட்டும் கூறுகிறேன்.

கதை சுருக்கம்:
வாதாபி(இன்றைய கர்நாடகா பகுதி)  மன்னன் புலிகேசி , பல்லவ மன்னன் மகேந்திர பல்லவனின் காஞ்சி கோட்டையை கைப்பற்றி பல்லவ சாம்ராஜ்யத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர படையெடுத்து வருகிறான். இதனை சற்றும் எதிர்பார்க்காத மகேந்திர பல்லவன் ஒரு சிறுபடையுடன் கிளம்பி புலிகேசியை வழியிலே இடைமறித்து வைக்கிறான். இதற்கிடையில் புலிகேசியின் அண்ணன் நாகநந்தி என்பவன் ஒற்றனாக காஞ்சி நகரில் இருந்து கொண்டு உளவு பார்த்து புலிகேசி படை தாக்குவதற்கான சரியான நேரத்தை ஓலையில் குறித்து அதை  பரஞ்சோதி(கல்வி கற்பதற்காக காஞ்சி வந்தவன்)  மூலமாக  புலிகேசியிடம் ஒப்புவிக்க அவன் அறியாமலே அவனிடம் அஜந்தா இரகசியத்தை அறிவதற்கு உரிய ஓலை இது என சொல்லி அனுப்புகிறான். நாகநந்தியின் சூழ்ச்சியை  போலவே பரஞ்சோதி புலிகேசியிடம் அகப்பட்டு கொள்கிறான் ஆனால் அதற்கு முன்னரே மாறு வேடத்தில் வரும் மகேந்திர பல்லவன் நாகநந்தியின் ஓலையை மாற்றி வைத்து விடுகிறார். மேலும் மொழி புரியாமல் புலிகேசியிடம் மாட்டிக் கொண்ட பரஞ்சோதியை மீட்டு பல்லவ படை முகாமுக்கு அழைத்து சென்று அவரை பல்லவ படையின் தளபதியாக்கி விடுகிறார். அதன் பிறகு  எட்டு மாதங்கள் புலிகேசியின் படையை முன்னேற விடாமல் தடுத்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் மகேந்திர பல்லவனின் மகன் மாமல்லனை காஞ்சி கோட்டையிலே பாதுகாப்புக்காக விட்டு விட்டு செல்கிறார். மேலும் நாட்டியகலையில் சிறந்து விளங்கும் சிவகாமி என்னும் ஆயனரின் மகளும் பல்லவ மன்னனின் மகனும் காதல் கொள்கின்றனர். நாகநந்தியும் சிவகாமியின் மேல் ஒருதலையாக காதல் கொள்கிறான், புலிகேசி எப்படியாவது பல்லவ நாட்டை வென்று இந்த சிவகாமியை எனக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி ஒற்றனாக வேலைபார்க்கிறான். மகேந்திர பல்லவனுக்கும் மாமல்லன் சிவகாமியை மணந்துகொள்ளவதில் விருப்பம் இல்லை.

மறுபுறம் வேங்கி நாட்டில் இருந்து படை எடுத்து வரும் துர்வீந்திரனை அடக்க மாமல்லனை படையுடன் புறப்பட்டு போகும் படி மகேந்திர பல்லவன் ஆணை இடுகிறார். துணைக்கு தளபதி பரஞ்சோதியை அனுப்பி வைக்கிறார். அவர்கள் துர்வீந்திரனை வென்று திரும்புகின்றனர். அதன்பிறகு மகேந்திர பல்லவனின் ஆணைப்படி காஞ்சி கோட்டையை பலப்படுத்துகின்றனர். புலிகேசி கோட்டை முற்றுகைக்கு முன்னேற பல்லவ படை காஞ்சி கோட்டையை வந்தடைகிறந்து. புலிகேசி படையோ  காஞ்சி கோட்டையை எவ்வளவோ முயற்சி செய்தும் கைபற்ற முடியாமல் சமாதான  தூது அனுப்புகின்றனர். அதனை ஏற்ற பல்ல மண்ணின் கோட்டையில் சில நாட்கள் விருந்தினராய் தங்கி விட்டு புலிகேசி புறப்படுகின்றான். இதற்கிடையில் நாகநந்தி பல்லவ படையால் காது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுகிறார். அவரை விடுதலை செய்ய செய்ய மகேந்திரன் மறுப்பதனால். புலிகேசி போகும் வழியில் தென்பட்ட எல்லாவற்றையும் அழித்து விட்டு பல பல்லவ பெண்களையும் , ஆணைகளையும் கைது செய்து கொண்டு செல்கிறான். நாகநந்தியோ நய வஞ்சகமாக ஆயனரை ஏமாற்றி சிவகாமியை வாதாபிக்கு அழைத்து செல்கிறான். 
மாறுவேடத்தில் வாதாபிக்கு செல்லும் மாமல்லனிடம் சிவகாமி  "இந்த புலிகேசியை வென்று வாதாபியியை எரித்து விட்டு அதன் பிறகு  என்னை அழைத்து செல்லுங்கள் என்று சபதம் செய்கிறாள்".அதன் பிறகு மகேந்திர பல்லவர் நோய்வாய்பட்டு இறக்கும் தருவாயில் மாமல்லனை வற்புறுத்தி பாண்டிய மன்னனின் மகளை மனம்முடித்து வைத்துவிட்டு வாதாபியை வென்று சிவகாமியை மீட்டு வரவேண்டும் என்று சொல்லி இறக்கிறார். ஒன்பது வருடங்களாக படையை  திரட்டி பாண்டிய படையின்  உதவியுடன் வாதாபியை அழித்து புலிகேசியை கொன்று சிவகாமியை மீட்டு வருகிறான்  மாமல்லன். ஆனால் கள்ள புத்த துறவியான நாகநந்தி சிவகாமியை கொல்லும் முயற்சியில் தோல்வியடைந்து தளபதி பரஞ்சோதியிடம் உயிர் பிச்சை வாங்கி தப்புகிறார்.

சிவகாமியோ மாமல்லன் திருமணமான செய்தி கேட்டு பெரும் துயருற்று சிவபெருமானையே மணந்து நாட்டிய கலையில் கவனத்தை செலுத்துகிறாள். தளபதி பரஞ்சோதியோ தளபதவியை துறந்து சிவா பக்தராகி சிவத் தொண்டு புரிகிறார். இவரே பின்னாளில் சிறுத்தொண்டர் என அழைக்கப்படுகிறார்