வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

பணத்தை IRCTC கணக்கிலே வைத்து கொள்ளும் புதிய முறையை அறிமுகம் செய்கிறது ரயில்வே

ரயில் டிக்கெட் முன்பதிவு  செய்பவர்களுக்கு ஒரு இனிய செய்தி. IRCTC ,  RDS  எனப்படும் புதிய முறையை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதன் மூலம் நீங்கள் முன்கூட்டியே உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை உங்களின் IRCTC கணக்கிற்கு அனுப்பி விடலாம். இந்த பணத்தை  நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளாம். இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு நேரத்தை கணிசமான அளவு குறைக்கலாம். தற்போது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்ட பிறகு நீண்ட நேரம் சென்ற பிறகுதான் IRCTC இனைதளமானது டிக்கெட் முன்பதிவு செய்யும். இனிமேல் இந்த காத்திருப்பு அவசியம் இல்லை நேரடியாக உங்களின் IRCTC கணக்கில் இருந்தே பணத்தை செலுத்தில் உடனடியாக டிக்கெட் முன்பதிவு  செய்து கொள்ளலாம்.

 

மேலும் டிக்கெட்டை நீங்கள் கேன்சல் செய்யும் போது பணம் உங்களின் வங்கி கணக்கிற்கு வந்து சேர நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும், இனிமேல் நீங்கள் டிக்கெட்டை கான்செல் செய்த உடன் பணம் உங்களின் IRCTC கணக்கில் வரவு வைக்கப்படும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக